search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருகே லாரி பட்டறையில் தீ விபத்து
    X

    அருகே லாரி பட்டறையில் தீ விபத்து

    • எருமாபாளையம் பகுதியில் ஒரு லாரி பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் பழைய லாரிகளை வாங்கி உடைத்து வியபாரம் செய்து வந்தனர்.
    • அதில் இருந்த பெட்ேரால் சிதறி விழுந்ததில் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.

    சேலம்:

    சேலம்-சென்னை தேசியநெடுஞ்சாலையில் எருமாபாளையம் பகுதியில் ஒரு லாரி பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் பழைய லாரிகளை வாங்கி உடைத்து வியபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி ஒரு லாரியின் பெட்ரோல் டேங்கை வெல்டிங் எந்திரத்தால் உடைத்த போது அதில் இருந்த பெட்ேரால் சிதறி விழுந்ததில் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது அங்கு பணியில் இருந்து ஓமலூர் நாராயணம் பாளையம் அண்ணா நகரை சேர்ந்த பட்டறை ஊழியரான பங்குராஜ் (வயது 45) என்பவர் தீக்காயம் அடைந்தார். இததனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு பங்குராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×