search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகரில்  கஞ்சா விற்ற  6 பேர் கைது
    X

    நெல்லை மாநகரில் கஞ்சா விற்ற 6 பேர் கைது

    • போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய நெல்லையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கஞ்சா விற்ற 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 170 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் உத்தரவின் பேரில் மாநகரப் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வண்ணார் பேட்டையில் கம்ப ராமாயண தெருவை சேர்ந்த மதி முருகன் (வயது 19), பாளை சன்னதி தெருவை சேர்ந்த முத்து சங்கர் (23), சந்திப்பு சிந்துபூந்துறை விக்னேஷ் (35), தச்சநல்லூர் வாலாஜா பேட்டை நடுத்தெருவை சேர்ந்த ஸ்ரீராம் நாதன், மேலப்பாளையம் நாகம்மாள் புரத்தைச் சேர்ந்த மகேந்திரன்( 37) காவல்பிறை தெருவை சேர்ந்த சங்கர் (34) ஆகியோர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது போலீசார் விசாரணை யில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களி டமிருந்து 170 கிராம் கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×