என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி
- உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகள் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
நாமக்கல்:
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி சரித்திர புகழ் வாய்ந்த சுற்றுலா தளமான மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இ ப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் ஸ்ரேயாபிசிங் தலைமையில் அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் எம்.பி. எ.கே.பி.சின்ராஜ் , நாமக்கல் எம்.எல்.ஏ. .ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி அவர்கள், காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்க ர்களால் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகளையும், விழி ப்புணர்வு மினி மாராத்தான் ஓட்டத்தினையும் அமைச்சர் மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும், 44 - வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் மதிவேந்தன் செல்பி எடுத்துக்–கொண்டார். தொடர்ந்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொண்டார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்