search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது
    X

    கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும் படத்தில் காணலாம்.

    தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது

    • இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்போது ராஜபாண்டி, கண்ண பெருமாள், கர்லின் மற்றும் ஷானவாஸ் ஆகிய 4 பேரும் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டி ருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    கஞ்சா பதுக்கல்

    அதில் அவர்கள் தூத்துக்குடி கணேஷ் நகரை சேர்ந்த ராஜபாண்டி (வயது24), அழகேசபுரம் பகுதியை சேர்ந்த கண்ண பெருமாள் (24), காந்திநகரை சேர்ந்த கர்லின் (24) மற்றும் நெல்லை பேட்டை, காமராஜ் நகரை சேர்ந்த ஷானவாஷ் (23) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து ராஜபாண்டி, கண்ண பெருமாள், கர்லின் மற்றும் ஷானவாஸ் ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிட மிருந்த 1,200 கிராம் அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ராஜபாண்டி மீது ஏற்கனவே சிப்காட் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், தென்பாகம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகள் என 12 வழக்கு களும், கண்ண பெருமாள் மீது 2 வழக்குகளும், கர்லின் மீது ஒரு திருட்டு வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட 5 வழக்கு களும் உள்ளது என போலீ சார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×