search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில்  கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது
    X

    தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது

    • தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் மொத்தம் 4½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கஞ்சா பறிமுதல்

    இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வடபாகம் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விரட்டி சென்று பிடித்த போது அவரிடம் 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின்படி அப்பகுதியில் மறைந்து நின்ற இருவரையும் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடமும் தனித் தனியாக பைகளில் தலா 1½ கிலோ கஞ்சா இருந்தது.

    3 பேர் கைது

    இதைத்தொடர்ந்து மொத்தம் 4½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆறுமுகநேரியைச் சேர்ந்த பெருமாள் (வயது28), செல்வராஜ் (24) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×