search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது
    X

    திருட்டு வழக்கில் கைதான ரஜினி, சக்திவேல், வரதராஜன்.

    மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

    • 10 ந் தேதி திருப்பனந்தாள் மதுபான கடையில் நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே மானம்பாடி சேர்ந்தவர்கிளின்டன்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த மாதம் 10 ந் தேதி திருப்பனந்தாள் மதுபான கடையில் நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இது குறித்து அவர் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் காட்டுமன்னார் கோவில் ரஜினி (வயது 38) அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (35) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளை திருடி விற்பதற்காக உட பேரியைச் சேர்ந்த வரதராஜன் (வயது 39) என்பவரிடம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் மூவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×