search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில்  குட்கா விற்ற 3 பேர் கைது- கார்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    X

    கடையநல்லூரில் குட்கா விற்ற 3 பேர் கைது- கார்-மோட்டார் சைக்கிள் பறிமுதல்

    • போலீசார் பண்பொழி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 90 கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் பகுதிகளில் கார், மோட்டார் சைக்கிள்களில் சில்லறை கடைகளுக்கு அதிக அளவில் குட்கா விற்பனை செய்வதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    90 கிலோ

    இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் உத்தரவின் பேரில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் மேல கடையநல்லூர் பண்பொழி சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது அந்த வழியாக வந்த கார்- மோட்டார் சைக்கிள்களை சோதனை செய்த பொழுது அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்டலங்கள் சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்ய கொண்டு வந்த 90 கிலோ ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா கண்டுபிடிக்கப்பட்டது.

    3 பேர் கைது

    இதனைத் தொடர்ந்து காரில் இருந்த தென்காசி ஐந்து வர்ணம் பெரிய தெருவை சேர்ந்த நாகூர் மீரான் (29), மேல கடையநல்லூர் இந்திரா நகர் புது காலனியைச் சேர்ந்த வைரமுத்து (39), தென்காசி புதுமனை இரண்டாவது தெருவை சேர்ந்த நூரி அமீன் (40) ஆகிய 3 பேரையும் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் விற்பனைக்கு பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×