search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரையில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    X
    கீழக்கரையில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

    கீழக்கரை நகராட்சி சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
    கீழக்கரை 

    கீழக்கரை நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற தலைப்பில் மக்கும் குப்பைகளை தனியாகவும், மக்காத குப்பைகளை தனியாகவும் பிரித்து தருவது குறித்த விழிப்புணர்வு பேரணி நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. 

    ஆணையாளர் செல்வராஜ், நகர் மன்ற துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி பொறியாளர் மீரான் அலி, துப்புரவு ஆய்வாளர் பூபதி உள்பட நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் வழி நெடுகிலும் பதாகைகளை ஏந்தியவாறு “பொது இடங்களில் குப்பை கொட்ட மாட்டோம்” பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம்” என்றும் “நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்வோம்” என்றும் “என் குப்பை எனது பொறுப்பு” என்று கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர். 

    கீழக்கரை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி கடற்கரையில் நிறைவடைந்தது.

    Next Story
    ×