search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் கொலை: கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை போலீசார் தீவிரம்

    அடையாளம் தெரியாத வகையில் முகம் அழுகிய நிலையில் இருந்த காரணத்தால், இறந்தவர் யார், எந்த ஊர், எதற்காக நடந்த கொலை உள்ளிட்டவை குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர்
    திருப்பூர்:

    திருப்பூரில், வாலிபர் கொலை வழக்கில், நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். மங்கலம், இச்சிபட்டி, கொத்து முட்டிபாளையத்தில் கடந்த, இரு நாட்களுக்கு முன்பு கல் குவாரியில் மிதந்த, 25 வயது மதிக்கதக்க வாலிபர் சடலத்தை மங்கலம் போலீசார் மீட்டனர். 

    கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் பாதி அழுகிய நிலையில் இருந்தது. அடையாளம் தெரியாத வகையில் முகம் அழுகிய நிலையில் இருந்த காரணத்தால், இறந்தவர் யார், எந்த ஊர், எதற்காக நடந்த கொலை உள்ளிட்டவை குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர். 

    வாலிபர் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க, பல்லடம்டி.எஸ்.பி., அவிநாசிபாளையம், மங்கலம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் அடங்கிய, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்டுள்ள கல்குவாரியை சுற்றியுள்ள பனியன் நிறுவனங்கள், கல் குவாரி உள்ளிட்டவைகளில் வேலை செய்து வந்த வெளியூர் நபர்கள் குறித்தும், 'சிசிடிவி' கேமரா பதிவு குறித்தும் விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×