search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் இன்று வாயில் துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.
    X
    தூத்துக்குடியில் இன்று வாயில் துணிகட்டி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

    தூத்துக்குடியில் இன்று காங்கிரசார் அறவழி போராட்டம்

    தூத்துக்குடியில் இன்று காங்கிரசார் அறவழி போராட்டம் நடத்தினர்.
    தூத்துக்குடி:

    பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில், தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. முன்னிலையில் இன்று  தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர்  அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம்,  முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுடலையாண்டி, டேனியல் ராஜ், மாநகர காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், மாநகர காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்கள் அருணாச்சலம், பிரபாகரன், சங்கவேல், முன்னாள் கவுன்சிலர் சாமுவேல் ஞானதுரை, செயலாளர்கள் நாராயணசாமி மரியசெல்வராஜ், தொழிலாளர் யூனியன் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சிவராஜ், விவசாய அணி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் எடிசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×