search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    அம்பை தாலுகா அலுவலக ஊழியர் மயங்கி விழுந்து சாவு

    அம்பை தாலுகா அலுவலக ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.
    நெல்லை:

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழ ஆம்பூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). 

    இவர் அம்பை தாலுகா அலுவலகத்தில் உதவி யாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார். 

    அங்கு உள்ள இசக்கியம்மன் கோவில் பகுதியில் சென்றபோது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

     உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையிலேயே ஆறுமுகம் மயங்கி விழுந்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். 

    ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  

    இதுதொடர்பாக அவரது மனைவி உலகம்மாள் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×