என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிலத்தகராறில் மோதல்-4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்16 May 2022 9:09 AM GMT (Updated: 16 May 2022 9:09 AM GMT)
மேச்சேரி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரி அருகே உள்ள பொறையான் கரடு பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் மனைவி முத்தம்மை. இவர் சின்னப்பையனின் முதல் மனைவி ஆவார்.
இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2-வது மனைவியின் மகன் செல்வராஜ் வழக்கு நடைபெற்று வரும் விவசாய நிலத்தில் விவசாய பணியினை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனைக்கண்ட முத்தம்மை இதுபற்றி கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 2-வது மனைவியின் மகன் செல்வராஜ், அவரது மனைவி அஞ்சலை, செல்வராஜின் மகன் கேசவன், மற்றும் கலையரசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து முத்தம்மையை தாக்கினார்கள்.
இதில் படுகாயமடைந்த முத்தம்மை மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலின்பேரில் மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி செல்வராஜ் ,அஞ்சலை ,கேசவன், கலையரசன் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X