search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் 18-ந்தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இ.எம்.ஐ.எஸ். இணையதள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும்.
    பல்லடம்:

    பல்லடத்தில், டிட்டோஜேக் அமைப்பின் மாவட்ட ஆயத்தக் கூட்டம் பல்லடம் நகராட்சி மேற்கு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். 

    இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்ட செயலாளர் ஜோசப், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாவட்டச் செயலாளர் கண்ணன் உள்பட வட்டாரப் பொறுப்பாளர்கள் 40 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இ.எம்.ஐ.எஸ். இணையதள குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும். நிறுத்தப்பட்ட, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினை மீண்டும் வழங்க வேண்டும். அரசாணை 101 மற்றும் 108 ஆகியவைகளை ரத்து செய்ய வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18-ந்தேதி திருப்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் தமிழக ஆசிரியர் கூட்டணி பல்லடம் வட்டாரச் செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.
    Next Story
    ×