என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது
Byமாலை மலர்14 May 2022 9:57 AM GMT (Updated: 14 May 2022 9:57 AM GMT)
மேலப்பாளையத்தில் பெண்ணை அவதூறாக பேசிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சுடலியம்மாள் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர் அண்ணாநகரை சேர்ந்த சுந்தர் என்பவர் மூலம் நாங்குநேரியை சேர்ந்த நம்பிராஜன் என்பவரிடம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த பணத்திற்கு உரிய வட்டி கொடுக்கவில்லை என கூறி நம்பிராஜன், சுந்தர் ஆகிய இருவரும் சுடலியம்மாள் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் மாணிக்கம் மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன், சுந்தர் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X