search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தேவனூர்புதூரில் நாளை மின்தடை

    உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது.
    உடுமலை:

    உடுமலை மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் எஸ். ராம்பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடுமலையை அடுத்துள்ள தேவனூர்புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட குறிஞ்சேரி உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 11-ந்தேதி( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை செல்லப்பம்பாளையம், நல்லூர், சின்னபொம்மன் சாலை, வீரல் பட்டி, புளியம்பட்டி ,குறிஞ்சேரி, பொன்னே கவுண்டன் புதூர் (பகுதி) ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    அந்த நாளில் மின் பாதைகளில் அருகில் உயரமாக உள்ள மரங்களின் கிளைகளை அகற்ற ஒத்துழைப்பு தரும்படி சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×