என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் மாநகரில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு - உடனே அகற்ற அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு
Byமாலை மலர்9 May 2022 10:45 AM GMT (Updated: 9 May 2022 10:45 AM GMT)
மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் அதற்கான தீர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழை நேரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையிலும், கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்யவும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது திருப்பூர் மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் உள்ள நாராயணசாமி நகர் மற்றும் ஏ.எஸ் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதாக மாநகராட்சி மேயர் தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் இன்று காலை உடனடியாக அதிகாரிகளுடன் சென்று அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வுக்கு பின் மேயர் தினேஷ் குமார் கூறியதாவது:-
மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் அதற்கான தீர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் மாநகர் பகுதியில் எந்தெந்த இடங்களில் மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X