search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.
    X
    கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

    திருப்பூர் மாநகரில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு - உடனே அகற்ற அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

    மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் அதற்கான தீர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மழை நேரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதை தடுக்கும் வகையிலும், கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை சரி செய்யவும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது திருப்பூர் மாநகராட்சி 49 வது வார்டு பகுதியில் உள்ள நாராயணசாமி நகர் மற்றும் ஏ.எஸ் நகரில் மழைநீர் தேங்கி நிற்பதாக மாநகராட்சி மேயர் தினேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் இன்று காலை உடனடியாக அதிகாரிகளுடன் சென்று அதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வுக்கு பின் மேயர் தினேஷ் குமார் கூறியதாவது:-

    மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்காத வகையில் அதற்கான தீர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் மாநகர் பகுதியில் எந்தெந்த இடங்களில்  மழை நேரங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
    Next Story
    ×