search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பாவூர்சத்திரம் அருகே வெல்டிங் பட்டறை- குடோனில் திருடிய தொழிலாளி கைது

    பாவூர்சத்திரம் அருகே வெல்டிங் பட்டறை மற்றும் குடோனில் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    வீ.கே. புதூர்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அழகம்பெருமாளூரை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 38).

     இவர் அந்தப் பகுதியில் வெல்டிங்  பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் இருந்து வெல்டிங் மெஷின் மற்றும் சில மெஷின்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு  திருட்டு போயிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    அதேபோல்  பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியை சேர்ந்த ஜோசப் ஜெயபாரதி மகிழ்வண்ணநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார்.

     இவர் கடைக்கான பொருட்கள் வைப்பதற்கு பெத்தநாடார்பட்டி அருகே உள்ள பொட்டலூரில் குடோன் வைத்துள்ளார்.

     இவரது குடோனிலும் 2 நாட்களுக்கு  முன்பு பாத்திரப் பொருட்கள் திருட்டு போய் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும்.

    இந்த 2 திருட்டு சம்பவங்கள் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் மூலம் திருடிய நபரை தேடி வந்தனர்.

    2 இடங்களிலும் ஒரேநாளில் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது ஒரே நபர்தான்  என்பது தெரியவந்தது. அதன்படி தனிப்படை போலீசார் அந்தப்பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் சாலடியூர் அருகே உள்ள டாஸ்மாக்  வழியாக வந்த ஒருவரை பிடித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்  தென்காசி அருகே  உள்ள நயினாகரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தொழிலாளி சங்கரன் என்ற செல்வம் (வயது 49)  என்பதும், பாவூர்சத்திரத்தில் 2 கடைகளில் திருட்டில் ஈடுபட்டதும் அவர்தான் என்பதும் தெரியவந்தது.

     அவரை  கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும்  திருடிய பொருட்களை மீட்டனர்.  கைதான சங்கரன் என்ற செல்வம் மீது 9 திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×