என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணி
Byமாலை மலர்9 May 2022 9:52 AM GMT (Updated: 9 May 2022 9:52 AM GMT)
பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்ட ஜவான்ஸ் பொது நலச்சங்கம் சார்பில் தற்போது எல்லை பாதுகாப்பு படை, துணை ராணுவத்தில் பணியாற்றி வருபவர்களும்,ஓய்வு பெற்றவர்களும் இணைந்து பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி உள்ள குப்பை கூழங்கள், முட்செடிகள், புதர்களை அகற்றி தூய்மை செய்தும் மருத்துவமனை வளாகத்தை சுற்றி 50-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டனர்.
மேலும் சுகாதார நிலையம் முன்பாக உள்ள பயணிகள் நிழற்கூடத்தை சுத்தம் செய்து வர்ணங்கள் பூசி தூய்மை பணி செய்தனர். நிகழ்ச்சிக்கு முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் முத்து தலைமையில் செயற்குழு உறுப்பினர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திருமணி ஆகியோர் முன்னிலையில் ஏராளமான ஜவான்ஸ் பொது நலச்சங்கத்தினர்கள் கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X