search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை மிரட்டல்
    X
    தற்கொலை மிரட்டல்

    முதியவர் தற்கொலை மிரட்டல்

    மதுரையில் குடிநீர் தொட்டியில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
    மதுரை

    மதுரை நாராயணபுரம் பகுதியில் குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. இன்று காலை முதியவர் ஒருவர் குடிநீர் தொட்டியின் மேல் ஏறினார். உச்சிக்கு சென்ற அவர் அங்கு இருந்தபடி, என்னிடம் இருந்து மனைவி பிரிந்து சென்றுவிட்டார். 

    எனவே நான் தற்கொலை செய்து சாகப்போகிறேன்” என்று கண்ணீருடன் கூக்குரல் எழுப்பினார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். 


    அப்போது அவர்கள் முதியவரை கீழே  இறங்கி வருமாறு வேண்டு கோள் விடுத்தனர். ஆனால் முதியவர் கேட்கவில்லை. எனவே பொதுமக்கள் இது தொடர்பாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அதன்பிறகு முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    அப்போது “உங்களை மனைவியுடன் சேர்த்து வைக்கிறோம்” என்று போலீசார் வாக்குறுதி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து முதியவர் குடிநீர் தொட்டியில் இருந்து கீழே இறங்கி வந்தார். தல்லாகுளம் போலீசார் அந்த முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர் கூடல்புதூர், கலைநகர் பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி (வயது56) என்பது தெரியவந்தது. 

    இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. எனவே மனைவி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்று உள்ளார். எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாசிலாமணி, நாராயணபுரம் குடிநீர் தேக்க தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. 

    இருந்தபோதிலும் ‘மாசிலாமணி தற்கொலை முயற்சிக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?’ என்பது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×