என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Suicid"
- இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவு அனைவரும் தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் காலை யில் பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மோகன்குமார் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
- இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள முருகன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் மோகன்குமார் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் கோபிசெட்டி பாளையம் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோமதி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து மோகன்குமார், கோமதியின் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தார். மோகன்குமா ருக்கு மது குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கணவன்- மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரவு அனைவரும் தூங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் காலை யில் பார்த்த போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மோகன்குமார் சேலையால் தூக்கு போட்டு தொங்கி கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
- இவர் எலி மருந்து தின்று விட்டார்.
புதுச்சேரி:
புதுவை பீச்சைவீரன்பேட் புதுநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகசந்தர்(வயது27). இவர் அங்குள்ள ராதாகிருஷ்ணன் நகரில் ஏ.சி. மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
இவர் எலி மருந்து தின்று விட்டார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லோகசந்தர் பரிதாபமாக இறந்து போனார். அவர் தற்கொலை செய்தற்காக காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து லோக சந்திரனின் உறவினர் கனகராசு கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியாங்குப்பம் மணவெளி அண்ணா வீதியை சேர்ந்தவர் பத்மநாராயணன். இவரது மனைவி தமிழ்செல்வி(60). இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வி அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரக்கோணம் அருகே கீழ்க்குப்பம், ஜவஹர் நகரை சேர்ந்த எட்வின் என்பவரின் மகள் சினேகா (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் டேனியல் என்ற அன்பழகனும் (21) காதலித்து வந்தனர். சினேகா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திருமணம் செய்யாமலேயே டேனியலுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சினேகா கடந்த 26-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சினேகாவின் தாயார் கீதா, அரக்கோணம் டவுன் போலீசில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
டேனியல் கடந்த சில மாதங்களாக நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று கூறி வந்து உள்ளார். அப்போது சினேகா, நான் உன்னை நம்பி வந்து உள்ளேன். நீ தற்போது பார்த்து வரும் வேலையை சரியாக பார்த்தாலே போதும் என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சினேகா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சினேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக டேனியலை போலீசார் கைது செய்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்