search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    எலி மருந்து தின்று  மெக்கானிக் தற்கொலை
    X

    கோப்பு படம்

    எலி மருந்து தின்று மெக்கானிக் தற்கொலை

    • மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
    • இவர் எலி மருந்து தின்று விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை பீச்சைவீரன்பேட் புதுநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகசந்தர்(வயது27). இவர் அங்குள்ள ராதாகிருஷ்ணன் நகரில் ஏ.சி. மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.

    இவர் எலி மருந்து தின்று விட்டார். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லோகசந்தர் பரிதாபமாக இறந்து போனார். அவர் தற்கொலை செய்தற்காக காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து லோக சந்திரனின் உறவினர் கனகராசு கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பம் மணவெளி அண்ணா வீதியை சேர்ந்தவர் பத்மநாராயணன். இவரது மனைவி தமிழ்செல்வி(60). இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வி அங்கே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×