என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீன்பிடி திருவிழா
Byமாலை மலர்7 May 2022 10:13 AM GMT (Updated: 7 May 2022 10:13 AM GMT)
மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளரிப்பட்டி. இது மதுரை-மேலூர் 4 வழிச்சாலையை யொட்டி அமைந்துள்ளது. வெள்ளரி கண்மாய் என்றழைக்கப்படும் இது பெரிய கண்மாய் ஆகும். இப்போது இங்கு விவசாயப்பணிகள் முடிவடைந்ததால் வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் கண்மாயில் பொதுமக்கள் மீன்கள் பிடிப்பதற்கு பாரம்பரிய மீன்பிடி திருவிழாவை இன்று அறிவித்திருந்தனர்.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கானமக்கள் கண்மாயை சுற்றிலும் குழுமியிருந்தனர்.
வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச சுற்றி இருந்த மக்கள் கண்மாய்க்குள் இறங்கினார்கள். அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கச்சா, வலை, கூடை மற்றும் மீன்பிடி சாதனங்களை வைத்து போட்டி போட்டு மீன்களை பிடித்தனர்.
இதில் நாட்டு வகை மீன்களான விரால் மீன், கட்லா, கெளுத்தி, கெண்டை உள்ளிட்ட ஏராளமான மீன்களை மக்கள் பிடித்துச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X