என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிறுமி கர்ப்பம்-போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Byமாலை மலர்7 May 2022 9:57 AM GMT (Updated: 7 May 2022 9:57 AM GMT)
அம்பை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பையை அடுத்த ஊர்க்காடு வடக்கு கோட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது உறவினர் ஒருவரின் 16 வயது மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதேபோல் 2 பேரும் அடிக்கடி தனிமையாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகினார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. உடனே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளர்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளது தெரியவந்தது. இதனை அறிந்த பெற்றோர் அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியது மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X