search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்லடம் அருகே வாலிபர் கொலை - கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

    போலீசார் விசாரணையில் வாலிபரை சிலர் துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அங்கு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் வாலிபரை  சிலர் துரத்தி கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் மகன் கோபால்( வயது 35) என்பதும், கடந்த 10 வருடங்களாக பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில், வசித்துக்கொண்டு பனியன் தொழிலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது.

    அவருக்கு சுசீலா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

    தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும்  போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.  
    Next Story
    ×