என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆறுமுகநேரி அருகே பெட்ரோல் பங்க் காசாளர் மீது தாக்குதல்
Byமாலை மலர்5 May 2022 9:38 AM GMT (Updated: 5 May 2022 9:38 AM GMT)
ஆறுமுகநேரி அருகே பெட்ரோல் பங்க் காசாளர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி கீழேநவ்வலடிவிளையை சேர்ந்தவர் ராஜலிங்கம் (26). இவர் சாகுபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அங்குள்ள டீசல் கவுண்டர் முன்பு நின்று உள்ளனர்.
அவர்களை பெட்ரோல் கவுண்டர் முன்பு வருமாறு ஊழியர் முத்துராஜ் என்பவர் கூறியுள்ளார். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரும் முத்துராஜின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்க தொடங்கினர்.
இதைப்பார்த்த ராஜலிங்கம் அந்த 4 பேரையும் தடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பியால் ராஜலிங்கத்தை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜலிங்கம் உடனடியாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜலிங்கத்தை தாக்கிய 4 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X