search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஜய் வசந்த்
    X
    விஜய் வசந்த்

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் வசந்த்

    தமிழகத்தில் இன்று துவங்கும் பொதுத்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி எழுத செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் விஜய் வசந்த் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் இன்று துவங்கும் பொதுத்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி எழுத செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பல இன்னல்களுக்கு மத்தியில் உங்களை நீங்கள் இந்நாளுக்காக தயார் படுத்தி உள்ளீர்கள். உங்களின் கடின உழைப்பு கண்டிப்பாக வினாத்தாள்களில் எதிரொலிக்கும்.  படித்தவை அனைத்தையும் ஞாபகம் கொண்டு எல்லா கேள்விகளுக்கும் சரியான விடையளிக்க உங்களுக்கு இயல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.  உங்கள் பெற்றோர்களுக்கும் உங்கள் ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அதிக மதிப்பெண்கள் பெற்று அனைவரும் தேர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×