search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பத்தில் மோதி நிற்கும் வேன்.
    X
    மின் கம்பத்தில் மோதி நிற்கும் வேன்.

    நெல்லை அருகே மின்கம்பத்தில் வேன் மோதி விபத்து-இளம்பெண்கள் உள்பட 7 பேர் காயம்

    நெல்லை அருகே தாழையூத்தில் சாலையோர கம்பத்தில் வேன் மோதியதில் இளம்பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்திற்கு நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் வேலைக்கு சென்று வருகின்றனர்.  சுழற்சி முறையில் காலை மற்றும் இரவு நேரங்களில் மினி வேனில் அவர்களை அழைத்து செல்வது வழக்கம்.

    நேற்று வழக்கம் போல் இரவு பணியை முடித்து விட்டு மினி வேனில் ஊருக்கு புறப்பட்டனர். மினி வேனை தூத்துக்குடி வர்த்தக ரெட்டிபட்டியை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (வயது27) என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று காலை தாழையூத்து அருகே வந்த போது சாலையோரத்தில் இருந்த உயர் அழுத்த  மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக வேன் மோதியது.

    இந்த விபத்தில் குறிச்சிகுளம் சாலை தெருவை சேர்ந்த சங்கரம்மாள் (65), அதே பகுதியை சேர்ந்த ரேவதி (18) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    மேலும் டிரைவர் ஈஸ்வர மூர்த்தி, தாழையூத்தை சேர்ந்த மரகதவல்லி (32), ஆவடையாச்சி (35), பிரியா (18), அமுதா (32) ஆகி யோருக்கு காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×