search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கொரோனா தடுப்பூசி 55 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 55 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்தஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

    மாவட்டத்தில் 27.56 லட்சம்பேருக்கு முதல் தவணையும், 20.69 லட்சம் பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று நடந்த 28-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. 

    இதற்காக மாவட்டம் முழுவதும் 1,070 தடுப்பூசி மையங்கள்அமைக்கப்பட்டு, 18,500 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில் 55011பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

    சேலம் சுகாதார மாவட்டத்தில் 26,693 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 12,246 பேரும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 16702 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
    Next Story
    ×