search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரேஷன் கடை ஊழியர்கள்.
    X
    ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ரேஷன் கடை ஊழியர்கள்.

    ரேசன் கடை பணியாளர்கள் போராட்டம்

    மதுரையில் இன்று ரேசன் கடை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    மதுரை

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகம் செய்ததாக 11 பணியாளர்கள் மற்றும் 9 கூட்டுறவு சங்க செயலாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனை  கண்டித்து ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில்  ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று   அறிவிக்கப்பட்டு இருந்தது. 

    மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்க ளின் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடந்தது.மதுரை மாவட்டத்தில் 880 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 920-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பொதுமக்களுக்கான அத்தி யாவசிய பொருட்கள் விநி யோகம் தடைபட்டது.

    மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கூட்டுறவு சங்க அனைத்து பணியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. 
    அதன் பிறகு மாவட்ட செயலாளர் ஆசிரியதேவன்  கூறுகையில், பொதுமக்க ளுக்கு தரமான அரிசி வினியோகம் செய்ய வேண்டியது நுகர்பொருள் வாணிப கழகத்தின் கடமை. அங்குள்ள தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஒப்புதலுக்கு பிறகு தான், அரிசி மூடைகள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. 

     நுகர்பொருள் வாணிப கழகம் அனுப்பும்  சில மூடைகளில் அரிசி தரம் குறைந்துள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இதற்கு ரேஷன்கடை பணி யாளர்களை பொறுப்பாளி ஆக்குகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காஞ்சி புரம் மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் செயலர்களின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். 

    அதனை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்கள் கோரிக்கைக்கு  செவிசாய்க்க மறுத்தால்  வருகிற 4-ந் தேதி முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
    Next Story
    ×