search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாம்பவர்வடகரையில் 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

    சாம்பவர்வடகரையில் 2 குழந்தைகளுடன் தாய் மாயமானார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    சாம்பவர்வடரையை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பேச்சியம்மாள்(வயது 35). இவர்களுக்கு நவநீதன்(15) என்ற மகனும், தீபா(13) என்ற மகளும் உள்ளனர்.
    மாரியப்பன் அப்பகுதியில் உள்ள பீடிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று வழக்கம்போல் காலை வேலைக்கு சென்ற அவர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. உடனே அக்கம் பக்கத்து வீடுகளில் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து சாம்பவர் வடகரை போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் 2 குழந்தைகளுடன் எங்காவது சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×