search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் கூட்டம் நடந்தபோது எடுத்தப்படம்.
    X
    யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் கூட்டம் நடந்தபோது எடுத்தப்படம்.

    கடையநல்லூரில் யூனியன் கூட்டம்

    கடையநல்லூர் யூனியனில் சாதாரண கூட்டம் யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது.
    கடையநல்லூர்:

     கடையநல்லூர் யூனியனில் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஆணையாளர் கந்தசாமி வரவேற்றார்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசல பாண்டியன், கீதா மணிகண்டன், சிங்கிலிபட்டி மணிகண்டன், சண்முகையா, மாரியம்மாள், மாரிச்செல்வி, சித்ரா, ரோஜா, சத்யகலா,  மற்றும் ஒன்றிய பொறியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் சொக்கம்பட்டி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தில்  கருப்பாநதி அணைக்கட்டு அருகில் உள்ள ஊராட்சி கிணற்றிலிருந்து மந்தை தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பைப்லைன் விரிவாக்கம் செய்வது,

    கிராம ஊராட்சி பகுதிகளில் கொசுக்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் அழித்தல், டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைக்காக தினக்கூலி அடிப்படையில் மஸ்தூர் பணியாளர்கள் மாவட்ட கலெக்டரின் செயல்முறை ஆணையின்படி நியமனம் செய்யப்பட்டுள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.
    Next Story
    ×