search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    மேச்சேரியில் இளம்பெண்ணை தாக்கிய லாரி டிரைவர் கைது

    மேச்சேரியில் இளம்பெண்ணை தாக்கிய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    மேட்டூர்:

    மேச்சேரி நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 36). இவருக்கு திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராணி  கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பாலு (55) என்பவருடன் வசித்து வந்ததாக 
    கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலு, சந்தேகப்பட்டு ராணியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராணி மேச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாலுவை கைது செய்தனர்.
    Next Story
    ×