என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்30 Jan 2022 10:20 AM GMT (Updated: 30 Jan 2022 10:20 AM GMT)
கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, பரமக்குடி, ராமநாதபுரம், ராமேசுவரம் ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், சாயல்குடி, தொண்டி ஆகிய 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ந்தேதி தொடங்கியது. கீழக்கரை நகராட்சியில் 43 வாக்குச்சாவடிகளில், 13 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி வாக்குச்சாவடியில் ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி பாதுகாப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஊழியர்களிடம் பொதுமக்களின் வருகை குறித்து கேட்டறிந்தார். துணை தாசில்தார் பழனிக்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X