search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலத்தில் கைதான 2 பேருக்கு கொரோனா

    சேலத்தில் கொத்தனாரை தாக்கி கைதான 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி கேட்  மூணாங்கரடு  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது 32), கார்த்திக் (30). இவர்கள் இருவரும்  கடந்த 25-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் தாமரைச்செல்வனை (25)  ஒரு பிரச்சினை தொடர்பான முன் விரோதத்தில் கத்திரிக்கோலால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை சேலம்  சிறையில்  அன்னதானப்பட்டி போலீசார் அடைத்தனர்.  

    அப்போது  அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் அவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  சதீஷ், கார்த்திக் இருவரும்  சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    Next Story
    ×