என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கயத்தாறு அருகே சிறுமி தற்கொலை- போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்ததாக புகார்
Byமாலை மலர்28 Jan 2022 9:34 AM GMT (Updated: 28 Jan 2022 9:34 AM GMT)
கயத்தாறு அருகே திருமங்களக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் பூமாரி (வயது 16). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை அவரது அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்கொலை செய்த சிறுமியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்ததாக கிராமநிர்வாக அலுவலர் விஜயலெட்சுமி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள திருமங்களக்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் பூமாரி (வயது 16). இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை அவரது அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்கொலை செய்த சிறுமியின் உடலை போலீசாருக்கு தெரியாமல் எரித்ததாக கிராமநிர்வாக அலுவலர் விஜயலெட்சுமி கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X