என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்தில் பூசாரி - ரியல் எஸ்டேட் உரிமையாளர் உயிரிழப்பு
Byமாலை மலர்22 Jan 2022 10:35 AM GMT (Updated: 22 Jan 2022 10:35 AM GMT)
தலையில் பலத்த காயமடைந்த திவ்யமணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணசாமி மகன் திவ்ய மணிகண்டன்(வயது 28). இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. கோவை - திருச்சி மெயின் ரோட்டில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பால் வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த திவ்யமணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடம் சென்று உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலையில் அருகேயுள்ள அய்யலு மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர் ( வயது 47). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர் இருசக்கர வாகனத்தில் ஏரிப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் இவர் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ரவிசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சையளித்தனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X