என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 Jan 2022 9:18 AM GMT (Updated: 12 Jan 2022 9:18 AM GMT)
நாகராஜ் கடந்த சில மாதங்களாக அதிக மதுப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி தமிழ்நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் நாகராஜ் (வயது 37). இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், சக்திவேல் என்ற மகனும் ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.
இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிக மதுப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தார் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
இந்தநிலையில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தனது நிலையை எண்ணி வருந்திய நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறி மாட்டும் கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
வெளியே சென்றுவிட்டு வந்த அவரது மனைவி இதனை பார்த்து உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X