என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிராம கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் - அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
Byமாலை மலர்11 Jan 2022 10:25 AM GMT (Updated: 11 Jan 2022 10:25 AM GMT)
திருப்பூர் குமரன் அடையாளத்தை மறைக்கும் வகையில் பெரியார், கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திருப்பூரில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 90ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருப்பூர் குமரன் நினைவகத்தில் உள்ள குமரன் சிலைக்கு இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:
திருப்பூர் குமரன் அடையாளத்தை மறைக்கும் வகையில் பெரியார், கருணாநிதி ஆகியோரின் சிலைகளை திருப்பூரில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிலைகளை அமைக்கக்கூடாது என்று கோர்ட்டே உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று வராத கொரோனா இப்போது பொங்கல் பண்டிகையில் மட்டும் எப்படி வந்துள்ளது என்று தெரியவில்லை. கோவையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கூட்டமே நடத்தி உள்ளார்கள்.
ஆனால் இப்போது பொங்கல் பண்டிகையன்று கோவிலில் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளனர். இது இந்து விரோதபோக்கு ஆகும். பொங்கல் அன்று கிராமப்புற கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X