search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமணம் தள்ளிப்போனதால் இளம்பெண் தற்கொலை

    மலர்விழிக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் தென்னை மரத்தோட்டத்தை சேர்ந்த கந்தசாமி மகள் மலர்விழி (வயது 27). இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்க சென்றனர். மீண்டும் நேற்று காலை எழுந்து பார்த்தபோது மலர்விழியை காணவில்லை .

    இதையடுத்து குடும்பத்தார் அக்கம்பக்கம் தேடினர். பின்னர் அவர்களது தோட்டத்து கிணற்றை பார்த்தபோது அதில் மலர்விழி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    போலீசார் விசாரணையில் மலர் விழிக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாகவும் இந்த நிலையில் மலர்விழியின் உறவினரான பாட்டி ஒருவர் இறந்துவிட்டதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    இதனால் மனவேதனையில் இருந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திருமணம் தள்ளிப்போனதால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் மாணிக்காபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×