என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமேசுவரத்தில் நள்ளிரவு முதல் கனமழை- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராமேசுவரம்:
தென்தமிழக கடற்கரையையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி ராமேசுவரம் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. தொடர்ந்து மழை பெய்ததால் பொது மக்களும், ராமேசுவரம் சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்கள் சென்றன. மழை காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
அதுபோல அன்றாட கூலி தொழிலாளிக்கு செல்லும் கட்டிட தொழிலாளர்கள், கரையோரம் மீன்பிடி சார்ந்த வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்