search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வேளச்சேரியில் பஸ்சில் சிக்கி இளம்பெண் பலி

    வேளச்சேரியில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவரை கிண்டி போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
    வேளச்சேரி:

    வேளச்சேரியை சேர்ந்தவர் சங்கீதா(வயது 37). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் வேளச்சேரி 100 அடி சாலை, குருநானக் கல்லூரி சந்திப்பில் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்து திரும்பிய தனியார் பஸ் சங்கீதாவின் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய சங்கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த புஷ்பராஜை கிண்டி போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×