search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சாம்பவர் வடகரை அருகே புதுப்பெண் தற்கொலை

    சாம்பவர் வடகரை அருகே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    சாம்பவர் வடகரை:

    சாம்பவர் வடகரை அருகே உள்ள ராஜபாண்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 27). இவரது மனைவி முப்புடாதி (23). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களாகிறது. இந்நிலையில் முப்புடாதி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான சுந்தரபாண்டியபுரத்திற்கு சென்றார். அங்கு திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.

    இதில் உடல்கருகிய அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



    Next Story
    ×