search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தஞ்சையில் கஞ்சா பதுக்கிய கணவன் மனைவி கைது

    தஞ்சையில் கஞ்சா பதுக்கியது தொடர்பாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே மாரியம்மன்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், எஸ்.எஸ்.ஐ. முத்துவேல் மற்றும் போலீசார் சிற்றரசு ஆகியோர் மாரியம்மன் கோவில் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில் மாரியம்மன் கோவில், செங்குந்தர் தெருவை சேர்ந்த விஜயராகவன் (வயது60), அவரது மனைவி உமா(52) ஆகியோர் வீட்டில் விற்பனைக்காக மதுரை உசிலம்பட்டி பகுதியில் இருந்து 2 கிலோ கஞ்சா வாங்கி வந்து பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×