search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த விழுப்புரம் ஆசாகுளம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 41), விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த சுரேஷ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுதொடர்பாக லாட்டரி மொத்த வியாபாரியான புதுச்சேரியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×