search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    வழக்குகளை கண்டு அஞ்சக்கூடிய கட்சி அல்ல அதிமுக - எடப்பாடி பழனிசாமி

    பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வினரை முடக்கிவிட முடியாது என அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பேருந்து நிலையம்  அருகில்
    அ.தி.மு.க. பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் பேசியதாவது: 

    அ.தி.மு.க.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசால் பொய் வழக்கு போடப்படுகிறது. வழக்குகளைக் கண்டு அஞ்சக்கூடிய கட்சி அ.தி.மு.க. அல்ல. பொய் வழக்குகள் போட்டு அ.தி.மு.க.வினரை முடக்கிவிட முடியாது. எம்.ஜி.ஆர். இருக்கின்ற போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானார்கள். அதையெல்லாம் உடைத்தெறிந்து சாதனை படைத்த தலைவர் உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. என தெரிவித்தார். 

    Next Story
    ×