என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காட்டில் விபத்தில் கட்டிட தொழிலாளி பலி
Byமாலை மலர்11 Oct 2021 10:22 AM GMT (Updated: 11 Oct 2021 10:22 AM GMT)
களக்காட்டில் விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மைக்கேல்ராஜ் (வயது 40). இவர் நேற்று மாலை களக்காடு-நாங்குநேரி ரோட்டில் நாங்குநேரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டபிள்ளை மதகு அருகே வந்த போது, எதிரே களக்காடு கோவில்பத்தை சேர்ந்த பிலிப் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளிலும், மைக்கேல்ராஜ் சென்ற மோட்டார்சைக்கிளிலும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மைக்கேல்ராஜ் சரிந்து, சாலையில் விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதில் மைக்கேல்ராஜ் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார்.
இதேபோல் பிலிப், அவரது மகன் பில்தாஸ் (11) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த களக்காடு போலீசார் மைக்கேல்ராஜை ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிலிப், அவரது மகன் பில்தாஸ் ஆகியோர் களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மைக்கேல்ராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதி குறுகிய வளைவாக இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மைக்கேல்ராஜ் (வயது 40). இவர் நேற்று மாலை களக்காடு-நாங்குநேரி ரோட்டில் நாங்குநேரி நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாட்டபிள்ளை மதகு அருகே வந்த போது, எதிரே களக்காடு கோவில்பத்தை சேர்ந்த பிலிப் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளிலும், மைக்கேல்ராஜ் சென்ற மோட்டார்சைக்கிளிலும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மைக்கேல்ராஜ் சரிந்து, சாலையில் விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதில் மைக்கேல்ராஜ் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார்.
இதேபோல் பிலிப், அவரது மகன் பில்தாஸ் (11) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த களக்காடு போலீசார் மைக்கேல்ராஜை ஆம்புலன்ஸ் மூலம் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிலிப், அவரது மகன் பில்தாஸ் ஆகியோர் களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மைக்கேல்ராஜ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதி குறுகிய வளைவாக இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X