search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கணக்குபாடம் சொல்லிதருவதாக கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

    கணக்குபாடம் சொல்லி தருவதாக கூறி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகில் உள்ள சேர்வைகாரன்பட்டி கோட்டாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(31). அதேபகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியான சிறுமி பள்ளி மூடப்பட்டிருந்ததால் ஆன்லைன் வகுப்பு படித்து வந்தார். அவர் கணிதபாடத்தில் சந்தேகம் இருப்பதாக பிரகாசிடம் கேட்டுள்ளார்.

    அதன்பேரில் அவருக்கு பாடத்தில் உள்ள சந்தேகத்தை தீர்ப்பதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 6 மாதமாக இதே நிலை நீடித்ததால் சிறுமியின் உடல் பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் விசாரித்தபோது நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து குஜிலியம்பாறை போலீசில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைதுசெய்தனர்.

    குஜிலியம்பாறை அருகில் உள்ள லந்தகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம்(70). இவர் அதே பகுதியில் உள்ள 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தபோது அங்கிருந்தவர்கள் ராஜலிங்கத்தை அடித்து குஜிலியம்பாறை போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் ராஜலிங்கம் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×