search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    சேந்தமங்கலம் பேரூராட்சியில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

    சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
    சேந்தமங்கலம்:

    சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அதன்படி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

    காந்திபுரம், அண்ணா நகர், ஜங்களாபுரம், சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும், ராசிபுரம் மெயின் ரோட்டில் உள்ள உருது தொடக்கப்பள்ளியிலும், காமராஜபுரம், மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையத்திலும், புதிய பஸ் நிலையத்திலும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். மேலும் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சேந்தமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி தலைமையில் சுகாதார அலுவலர் பாலு மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×