என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேந்தமங்கலம் பேரூராட்சியில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
Byமாலை மலர்9 Oct 2021 9:35 AM GMT (Updated: 9 Oct 2021 9:35 AM GMT)
சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அதன்படி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.
காந்திபுரம், அண்ணா நகர், ஜங்களாபுரம், சந்தை ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளிலும், ராசிபுரம் மெயின் ரோட்டில் உள்ள உருது தொடக்கப்பள்ளியிலும், காமராஜபுரம், மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையத்திலும், புதிய பஸ் நிலையத்திலும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும். மேலும் நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சேந்தமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி தலைமையில் சுகாதார அலுவலர் பாலு மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X