search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    உள்ளாட்சி தேர்தல்- டாக்டர் அன்புமணி ராமதாஸ் 3 நாள் சூறாவளி பிரசாரம்

    ஊரக உள்ளாட்சித்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாளை மறுநாள் பரப்புரை மேற்கொள்கிறார்.
    சென்னை:

    பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாளை மறுநாள் (30-ந்தேதி) முதல் மொத்தம் மூன்று நாட்கள் பரப்புரை மேற்கொள்கிறார்.

    அவர் பிரசாரம் செய்யும் தேதி, இடங்கள், நேரம் விவரம் வருமாறு:-

    30-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணி- ஆத்துமாமாந்தூர்- கள்ளக்குறிச்சி மாவட்டம்.

    மாலை 5 மணி- கூட்டேரிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம்

    அக்டோபர் 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி-திம்மாவரம், செங்கல்பட்டு மாவட்டம்.

    மாலை 5.00 மணி அவலூர், காஞ்சிபுரம் மாவட்டம்.

    2-ந்தேதி (சனிக்கிழமை)- காலை 11 மணி சுமை தாங்கி, ராணிப்பேட்டை மாவட்டம்.

    மாலை 3 மணி -பொய்கை சந்தை மைதானம், வேலூர் மாவட்டம். மாலை 5 மணி- நெக்குந்தி, திருப்பத்தூர் மாவட்டம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×