என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு
Byமாலை மலர்27 Sep 2021 10:30 AM GMT (Updated: 27 Sep 2021 11:16 AM GMT)
2 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகி இருப்பதால் மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:
அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது.
இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு திமுகவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார். தற்போது இவர்கள் இருவரும் தேர்வாகி இருப்பதால் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X